செவ்வாய், 6 ஜனவரி, 2026

அச்சத்தை தவிர்த்தால் ஞானம் தானே வரும்

திங்கள், 5 ஜனவரி, 2026

சுவாமிகள் கூறும் சிவபூஜை பஞ்சாமிர்தம்.

பச்சை பசும்பால் சிறிதளவு, நெய்,தேன்,கற்கண்டு தூள்,கொட்டை நீக்கிய பேரீச்சம்பழ துண்டுகள், பனைவெல்லம். இவைகள் அனைத்தையும் நன்கு இடித்து,நெய் தேனுடன் பிசைந்து வைத்தால் நீண்ட நாட்கள் சுவையாக இருக்கும்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

உயர்ந்த ரக கொரோசனத்தை பெட்டியில் வைத்து இருந்தாலும் இலக்ஷ்மி கடாட்சம் பெறலாம்

இலட்சமி கடாட்சம்

வில்வமரத்தின் வடகத்திய வேர்,ஆலமரத்தின் வடகத்திய வேர், நாவல் மரத்தின் வடக்கத்திய வேர் ஆகிய மூன்று வேர்களையும் காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று சந்தனம் போல அரைத்து நெற்றியில் திலகம் இட்டு வந்தாலும் இலட்சமி கடாட்சம் பெறலாம்.

வெள்ளி, 2 ஜனவரி, 2026

இலக்ஷ்மி கடாட்சம்

ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசையும் கூடிய நன்னாளில் 

காரைக்காய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் ஆகியவைகளில் ஒன்றை நகம் படாமல் காப்பு கட்டி எடுத்து சாமிகளின் சமாதியில் வைத்து உயிர்ப்பு பெற்று, அருளாசியும் பெற்று பெட்டியிலோ அல்லது பீரோவிலோ வைக்கவேண்டும்.( சிறிது நாட்கள் காற்றோட்டமாக வைக்கவேண்டும்)

வியாழன், 1 ஜனவரி, 2026

சுவாமிகள் ஒருவருக்கு எந்த நல்ல காரியம் செய்ய விரும்பினாலும் முதலில் பல சங்கடங்கள், சஞ்சலங்கள்,கொடுத்து சோதித்து பார்த்து வழங்குவது வழக்கம். நாம் உறுதியாக இருக்கவேண்டும்.பத்து குழந்தைகளை பெற்ற தாய்,தன் பிள்ளைகளுக்கு எது நலம் என்று கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொருவித நலம் கவனிக்கும். அது போல் தருணம் வரும்பொழுது சுவாமிகள் அருளுவார்

 அன்னதானம்


   உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.