திங்கள், 18 ஜனவரி, 2016


அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான் நடைபெறுகிறது ,என்று நினைப்பது   பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் .
சுவாமிகள் கஷ்டங்களை கொடுக்கிறார்.

 அந்த கஷ்டத்திலும் யாதோ நன்மை இருக்கத்தான் செய்கிறது .

அந்த நன்மையை நாம் உணரவேண்டும் .
அச்சம், ஆசை, மர்மம் இம்மூன்றையும் போக்கினால் தான் தெரியும் .
அதற்கும் நேரம் வர வேண்டும் .
இம்மூன்றையும் விட்டால் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் மனம் நிதானமாக இருக்கும் , இரண்டையும் சமமாக நினைக்கும் மனம் வரும் .

இம்மூன்றையும் அடக்கினால் கடவுளை சீக்கிரம் அடையலாம் .

வைராக்கியம், விடா முயற்ச்சி, சிரத்தை முக்கியமானவை .
சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.
ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .
அச்சமும் ஆசையும் அறிவுள்ளவர்களுக்கு இல்லை .
அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம் . 
அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான் நடைபெறுகிறது,
 என்று நினைப்பது   பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் .
சாதகமான சூழ்நிலையோ , பாதகமான சூழ்நிலையோ எது நேர்ந்தாலும் சுவாமிகள் திருவடிகளை மறக்காமல் இருப்பதே எவ்விதத்திலும் நன்மை தரும் .