எளியவன் எதோ கஷ்ட்டத்திற்கு வந்து உதவி கேட்கும் போது நீ உதவி செய்கிறேன் என்று கூறினால் வேறு யாரிடமும் கேட்காமல் உன்னை நம்பியே இருப்பான்
சூழ்நிலை காரணமாக உன்னால் உதவி செய்ய முடியவில்லை என்றால் அவன் கஷ்டப்படுவான்
அதே நேரத்தில் வேறு யாரிடமும் கேட்டு இருந்தால் அவர்களில் யாராவது ஒருவர் உதவி செய்திருப்பார்கள்
எனவே யாராவது உதவி என்று வந்து கேட்டால் யோசித்து சொல்கிறேன் பார்க்கலாம் என்று கூறு
ஆனால் உன்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்
பணக்காரனுக்கு நீ வைத்தியம் இந்த இலை, இந்த பட்டை, இந்த மருந்து என்று விவரங்கள் கேட்டு விட்டு அவன் அதற்க்கு எங்கு கிடைக்கும் எப்படி செய்வது என்று கேட்காமல் நீயே போய் எடுத்து வந்து செய்து கொடுத்து விடு என்பான்
என்று சுவாமிகள் கூறுவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக