ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

சரீரத்தை வதக்கினால்தான் சிவனை காணலாம்

சனி, 16 ஆகஸ்ட், 2025

பெரிய கால் விரலை பார்த்துக்கொண்டு போனால் கஷ்டப்பட மாட்டார்கள். காலை எழுந்தவுடன் இரண்டு கால் பெரிய விரல்களை பார்க்கவேண்டும்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

கன்னத்தில் கை வைத்தால் தரித்திரம், கஷ்டம் வரும், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது.

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

எளியவன் எதோ கஷ்ட்டத்திற்கு வந்து உதவி கேட்கும் போது நீ உதவி செய்கிறேன் என்று கூறினால் வேறு யாரிடமும் கேட்காமல் உன்னை நம்பியே இருப்பான்

சூழ்நிலை காரணமாக உன்னால் உதவி செய்ய முடியவில்லை என்றால் அவன் கஷ்டப்படுவான்

அதே நேரத்தில் வேறு யாரிடமும் கேட்டு இருந்தால் அவர்களில் யாராவது ஒருவர் உதவி செய்திருப்பார்கள்

எனவே யாராவது உதவி என்று வந்து கேட்டால் யோசித்து சொல்கிறேன் பார்க்கலாம் என்று கூறு

ஆனால் உன்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்

பணக்காரனுக்கு நீ வைத்தியம் இந்த இலை, இந்த பட்டை, இந்த மருந்து என்று விவரங்கள் கேட்டு விட்டு அவன் அதற்க்கு எங்கு கிடைக்கும் எப்படி செய்வது என்று கேட்காமல் நீயே போய் எடுத்து வந்து செய்து கொடுத்து விடு என்பான்

என்று சுவாமிகள் கூறுவார்கள்

எளியவனுக்கு ஆசை வார்த்தை சொல்லாதே, பணக்காரனுக்கு வைத்தியம் சொல்லாதே

புதன், 13 ஆகஸ்ட், 2025

துஷ்டனைக்கண்டால் தூரப்போ, சுடுகாட்டை கண்டால் ஒதுங்கிப்போ

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

ஒழுக்கமுடையவர்களிடம் எல்லாம் தங்கும்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

எது இருந்தாலும் பொறுமை வேண்டும்.ஆழ்ந்து செயல்படவும்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

குடும்பத்தை மூடி வாழும் தத்துவம் நல்லது.

சனி, 9 ஆகஸ்ட், 2025

கெட்ட நேரம் வரும் பொழுதுதான் கடவுளும் சேர்த்து கஷ்டம் கொடுக்கிறார்கள். நல்ல நேரமானால் யாவும் தள்ளி விடும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

யார் வந்து தண்ணீர் குடிக்க கேட்டாலும் தண்ணீர் இல்லை என்று சொல்லக்கூடாது.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஒன்று பிடித்தாலும் வலுவாக பிடித்து ஒரே எண்ணத்தில் இருக்கவேண்டும்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

நோய் நொடி இல்லாமல் இருப்பது தான் புண்ணியம்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

உயிர் போகும் தருணத்தில் ,கோரோஜனத்தை தண்ணீரில் விட்டு, பாலில் வெள்ளி காசு போட்டு கொடுத்து பிறகு சிறிது நேரம் பொறுத்து கோரோஜனத்தை கொடுத்தால் மூன்றே முக்கால் நாழிகை உயிருடன் இருப்பார்கள்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கட்டை இருக்கும் வரை இருந்துவிட்டு ஆத்மா ஒரு ஹிம்சை இல்லாமல் பிரிவதுதான் புண்ணியம்.

சனி, 2 ஆகஸ்ட், 2025

துறவிக்கு விரோதம் எமன்,சனீஸ்வரன்.

சனீஸ்வரன், எமனுக்கு எதிரானவர்கள் துறவியும், விக்னேஸ்வரனும்.

கூடி கெட்டவர்கள் யாரும் இல்லை, பிரிந்து கெட்டவர்கள் உண்டு.

அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம்.