செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.

ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .

சனி, 14 பிப்ரவரி, 2026

ஒருவனுக்கு எழுத, படிக்க தெரியாது .எப்பொழுதும் முருகர் துணை ,ஓம் பராசக்தி துணை என்று எழுதிக்கொண்டு இருப்பான். சுவாமிகளிடம் வந்து குறைகளை கூறினான் .அதற்கு சுவாமிகள்  "அப்பா பைத்தியமே துணை" இவ்வாறு எழுதினால் கஷ்டம் தீரும் ஆனால் சோதனை வரும் என்றார் .அந்த ஆளுக்கு எழுத தெரியாது.பக்கத்தில் இருந்தவர் எழுதி கொடுக்க அதன் மேல் எழுதி பழகி ,15 நாட்கள் விடாமல் எழுதினான். எழுத எழுத சக்தி  நிறைய வந்தது .

எலுமிச்சம் பழத்தை கையில் வைத்து மந்திரம் சொன்னால் திருடு போன பொருட்கள் இருக்குமிடம், திருடர்கள் யார் யார் என்றுகூறிவிடுவானாம்.எலுமிச்சம் பழத்தை கையில்வதால் மேலே ஏறி இறங்குமாம் .ஒவ்வொரு நாளும் எலுமிச்சை பழம் விற்பவரிடம் சென்று இலவசமாக வாங்கி விடுவான் .பழம் விற்ப்பவரும் சுவாமிகளிடம் வது செல்பவர் .ஒரு முறை பழம் கிராக்கி மார்க்கெட்டில் எங்கும் கிடைக்கவில்லை .
அந்த நேரத்தில் பழம் நிறைய கேட்கும் கையில் சிறிது மட்டும் எடுத்து செல்லுமாறு கூறினார் கடைக்காரர் .நான் மந்திரம் போட்டால் உனது கடை என்ன ஆகும் தெரியுமா என்று பயமுறுத்தினான் அந்த ஆள் .அதற்கு பழ கடைக்காரர் உன் மந்திரத்தை எல்லாம் வேறு யாரிடம்மாவது வைத்து கொள் நான் அப்பா பைத்தியம் சுவாமிகளை பயபக்தியுடன் கும்பிடுகிறேன்,அவர் இருக்கும் போது என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார் .
அதற்கு அவன் நான் எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்து மந்திரம் போட்டால் சுவாமியையே இங்கு வரவழைப்பேன் என்று ஆணவமாக கூறினான்.அன்று இரவு அவன் மேற்க்கு தலை வைத்து கிழக்கு கால் நீட்டி  படுத்துறங்கும் போது விடியற்காலை 3 . 30 மணிக்கு ஒரு பெண் குழந்தை அருகில் நின்று கொண்டு இருந்தது,அக்குழந்தை அருகில் பீமன் போல் ஒரு ஆள் இருந்தார் ,அவரிடம் ஏறி மிதித்து கொல் என்றது குழந்தை.அந்த ஆள் ஏற மந்திரவாதி அலறினான் .
அப்போது சுவாமி அங்கு வந்து அவனை விட்டு விடுங்கள் பாவம், அந்த புத்தியை நீங்கள் தானே கொடுத்தீர்கள் என்றார். பின் யாவரும் மறைந்து   விட்டார்கள்  . விடிந்ததும்  சுவாமிகளை தேடி ஓடி வந்து மன்னிப்பு கேட்டான் .

சுவாமிகளிடம் எதாவது சாப்பிடுங்கள் என்றான்,வேண்டாம் என்று கூறினார் சுவாமிகள் .கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினான் .எனது வயிறுக்கு யாரும் சாப்பாடு போட முடியாது என்றார் சுவாமி ,நான் போடுகிறேன் என்றான் மந்திரவாதி .அங்குள்ள செட்டியார் கடையில் 159 இட்லி ,15 பக்கெட் சாம்பார், சட்னி ,18 ரவா தோசை ,உப்புமா எடுத்து வந்தனர் .சுவாமிகள் தனது கைகளால் பிசைந்து சாப்பிட்டார் .செம்பு செம்பாக காபி, ஒரு சொட்டு கூட மீதி வைக்கவில்லை .அப்படி இருந்தும் சுவாமிகளுக்கு பசி நீங்கவில்லை .மறுபடியும் மன்னிப்பு கேட்டான்,எல்லாம் காலி,கொடுப்பதற்கு எதுவும் இல்லை .பசியை ஏன் உண்டாக்கினீர்கள் என்றார் சுவாமி,இத்தனைக்கும் வயிறு ஒட்டித்தான் இருந்தது .சாயந்தரம் ஏழு மணிக்கு தண்ணீர் குடித்தவுடன் தான் பசி அடங்கியது .சுவாமி சாப்பிட்டாரா?பூதம் சாப்பிடதா ? என்றனர் அனைவரும் .பூதமல்ல என்றார் சுவாமிகள் .தாயின் வயிற்றின் அகலம், ஆழம் தெரிந்தவன் தான் எனக்கு வயிறு பூரா சாப்பாடு போட முடியும் என்றார் சுவாமி. 

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

செல்வம் வரும் போது   

செருக்கு வரக்கூடாது.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

சட்டி எடுத்து   பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்

புதன், 11 பிப்ரவரி, 2026

தர்மம் செய்தால்   மட்டுமே கிரகங்களின் தோஷம்,கெடுதல்களை தடுக்க முடியும், 

பூஜைகளாலும்   தவத்தாலும் கிரகங்களை தடுக்க முடியாது

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

மற்றவர்களுக்கு நல்லது செய்யா விட்டாலும், கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும்.

சனி, 7 பிப்ரவரி, 2026

பகிர்ந்து உண்டால் பசி ஆறும் . தானே தின்றால் வீணா போகும்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

இறைக்கிற கிணறு ஊறும்.

கெட்ட செலவு செய்யாமல் நல்ல செலவு(தர்மம்) செய்தாலும் காசு வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்

வியாழன், 5 பிப்ரவரி, 2026

சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும் ஒரு பங்கை சேமித்து வைக்கவும் மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும் தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும்.

புதன், 4 பிப்ரவரி, 2026

தாயின் சக்தி

தாயின் சக்திதான் ஜோதி
தாயின் சக்திதான் மயில்வாகனம்
தாயின் சக்திதான் குயில்
குயில் கூவுமிடத்தில் நீர் வளம் மிகுந்து இருக்கும்
மயில் கூட்டம் கூட்டமாக உள்ள இடத்தில் முருகர்   சக்தி   மிகுந்து  இருக்கும்
பேயாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான் .
தெய்வமாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான்
தாயினுடைய பாசவலைதான் பேயாகவும், பிசாசாகவும், சாமியாகவும் வந்து ஆடுவது .

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

ஆழ்ந்த யோசனையும், அமைதியும் தியானத்திற்கும், குடும்பத்திற்கும் தேவையானது

திங்கள், 2 பிப்ரவரி, 2026

மொட்டை அடித்து கொள்வது எதற்கு

இனிய தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது.முருகர் சாமியார் உருவம் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து பசியாற்றுங்கள் என்றார் , அவர்கள் உணவு பரிமாறும் போது உங்கள் வீட்டு குழந்தையை கூப்பிடுங்கள் என்றார்  அவர்கள் குழந்தையில்லை என்றனர் குழந்தை இல்லாத வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று எழுந்து விட்டார்.தம்பதிகள் இருவரும் காலில் விழுந்து வணங்கி அழுதனர்.நீங்கள் கேட்டபடி பிள்ளைபேறு வரம் அளிக்கிறேன் நீங்கள் பதிலுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டார்.நீங்கள் கேட்பதை தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் .அதற்கு அவர் உயிர் பொருளை கொடுங்கள் என்றார்.


குழந்தையும் பிறந்தது.சிறிது நாட்கள் கழித்து பேசியபடி உயிர்பொருளை கொடுக்க முருகர் கோயிலுக்கு சென்றனர் பின் குழந்தையை பலியிட்டு தன் நாக்கையும் அறுத்து கொண்டனர் . உடனே முருகர் தோன்றி ஏனப்பா உயிர் பொருளை தானே கேட்டேன் உயிரையா கேட்டேன் என்று கேட்க அவர்கள் உயிர் பொருள் எது என்று அவர்கள் முருகனிடம் கேட்க முருகன் தலைமுடி என்றார். குழந்தை சேவலாக மாறியது .


அதனால் தான்  சேவல் பலிகொடுப்பது , மொட்டை அடித்து கொள்வது .

தலைமுடியும் நகமும் உயிர்போருட்கள் நெருப்புக்கு மட்டும் அழியும் மற்ற எதுவாலும் அழியாது . மொட்டை மூன்றுமுறை அடித்தால் கிரக தோஷம் நீங்கும் மொட்டை சாமிக்கு நேர்ந்து கொண்டு அடித்தால் பத்து காவு ( பலி ) கொடுப்பதற்கு சமம் என்று கூறுவார் நம் சுவாமி . சுவாமிகள் நகம் வைத்து இருப்பது  மிக்க விசேஷம் எதாவது பெரிய கஷ்டம் வரும்போது சுவாமிகள் உயிர்பொருள் ஆன நகத்தை கொடுப்பார் .

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

சுவாமிகளை நினைக்கும் பொழுதும், மற்ற எந்த காரியம் செய்யும் பொழுதும், அதே கவனமாக காரியம் செய்தால் தான் பலன் கிட்டும், மனதை கண்டபடி அலைய விட்டால் பலன் கிட்டாது