புதன், 12 நவம்பர், 2025

சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.

ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .

செவ்வாய், 11 நவம்பர், 2025

இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும். எல்லாம் போய்விடும்.


கஷ்டம் வரும் காலங்களில் சுவாமிகளின் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கவேண்டும்.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

தர்மம் செய்யும் குடும்பம் என்றைக்கும் குறையாது.இப்போது தெரியாது பின்னால் தெரியும்.



வெள்ளி, 7 நவம்பர், 2025

எவ்வளவு பொருளை அற வழியில் செலவு செய்தோமோ அவ்வளவு மட்டும் நம்முடைய பொருள்.

வியாழன், 6 நவம்பர், 2025

எங்கு தர்மம் செய்வது ?

எங்கு தர்மம் செய்வது ?

எட்ட போய் தர்மம் செய்தால் ( சாப்பாடு போடுதல் ) தான் புண்ணியம் கிடைக்கும் .

தன் வீட்டில் செய்தால் எப்போதும் புண்ணியம் இல்லை பிறர் இடத்தில்தான் செய்யவேண்டும் .

தன் வீட்டில் செய்யும் போது தனக்கு என்று எடுத்து வைத்திருப்போம் .சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லுவோம் . வீட்டில் இருத்தி வைத்துக்கொண்டே ஆயிடுச்சி என்று சொல்வது தர்மமா ?