நல்லவனுக்கு வரும் பணம், நல்ல வழியில் செலவாகும்.
செவ்வாய், 30 செப்டம்பர், 2025
திங்கள், 29 செப்டம்பர், 2025
கூடி கெட்டவர்கள் இல்லை.
பிரிந்து கெட்டவர்கள் அநேகர்
சனி, 27 செப்டம்பர், 2025
அன்னதானத்தை விட சிறந்தது – தினை அரிசி நான்கு படியை, தினமும் மூன்று விரல்களால் ( பெருவிரல்,நடுவிரல்,மோதிரவிரல்) எடுத்து எறும்புக்கு போடவேண்டும். நூறு பேருக்கு சாப்பாடு போடுவதை விட சிறந்தது.தினை அரிசி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து படைத்தது குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
வெள்ளி, 26 செப்டம்பர், 2025
கணவனுக்கு வரும் கண்டத்தை மனைவி தான் காப்பாற்றுவாள்
பத்து வருடம் தவம் செய்யும் ஆணை விட புண்ணியத்தை பெண் சில மாதங்களில் வாங்கி விடுகிறாள்
புதன், 24 செப்டம்பர், 2025
செவ்வாய், 23 செப்டம்பர், 2025
இரைக்கிற கிணறு ஊறும்.
கெட்ட செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல செலவு செய்தாலும் காசு வந்து சேரும்
திங்கள், 22 செப்டம்பர், 2025
நல்லது செய்து பத்து ரூபாய் வாங்கு, காப்பாற்றி வாங்கு, அதில் இரண்டு ரூபாய் நல்லது செய்
ஞாயிறு, 21 செப்டம்பர், 2025
சனி, 20 செப்டம்பர், 2025
ஞாயிற்றுக்கிழமை அமாவாசை சேர்ந்த நாளில் கலக்காகாய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று பெட்டியிலோ, பீரோவிலோ, பூஜை மாடத்திலோ காற்றாட வைத்தால் இலக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
வெள்ளி, 19 செப்டம்பர், 2025
ஒரே உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த கிரகமும் ஒன்றும் செய்யாது
வியாழன், 18 செப்டம்பர், 2025
புதன், 17 செப்டம்பர், 2025
விலை மதிக்க முடியாத சொத்து படிப்பு ஒன்று தான், காலை நான்கு முப்பது மணியில் இருந்து ஆறு மணி வரை படிக்க வேண்டும்
செவ்வாய், 16 செப்டம்பர், 2025
நம்பிக்கையும், உறுதியும் வந்தால் எல்லாம் சற்று விலகி விடும்.
திங்கள், 15 செப்டம்பர், 2025
நம்பிக்கை இழக்காமல் இருந்தால் வட்டிக்கு வட்டி சுவாமிகள் கொடுப்பார்.
ஞாயிறு, 14 செப்டம்பர், 2025
பூரணமான நம்பிக்கை என்பது ஒன்றை பிடித்தாலும் உறுதியாக பிடி என்பது.
சனி, 13 செப்டம்பர், 2025
வியாழன், 11 செப்டம்பர், 2025
செய்யும் தர்மம், நல்லவை செய்யும் பொழுது அடுத்தவனுக்கு தெரியக்கூடாது, தெரிந்தாலும், சொன்னாலும் நாம் செய்த புண்ணியம் எல்லாம் போய்விடும்
புதன், 10 செப்டம்பர், 2025
பணியில் ஓய்வு பெற்ற பிறகு சின்ன சிவலிங்கம் வாங்கி வைத்து அதன் மேல் பூ ( தும்ப பூ,வில்வ இலை) போட்டு கொண்டு மௌனமாக ஆறு மாத காலம் உட்கார்ந்தால் மனம் ஒருமை படும்.
செவ்வாய், 9 செப்டம்பர், 2025
ஆடி மாதத்தில் கஷ்டத்திற்காக பொருள் ஏதேனும் விற்றால் அதே ஆடி மாதத்தில் அப்பொருளை வாங்கினால் நல்லது. ஆடியில் விற்றால் அடுத்த ஆடியில் மறுபடியும் விற்க நேரிடும்
திங்கள், 8 செப்டம்பர், 2025
சாப்பிட்டவர்கள் “ சாப்பாட்டில் உப்பு இல்லை என்றாலும் , உப்பு இல்லை என்று சொல்லக்கூடாது “
அப்படி சொன்னால் இருவருக்கும் புண்ணியம் இல்லை , உப்பு இல்லை என்றால் செய்தவர் மனம் புண்படும், ஆகையால் சொல்லக்கூடாது
கோயிலுக்கு கொடுக்க வேண்டியது.
விளக்கு – தூங்கா விளக்கு எண்ணை ஊற்றி, குத்து விளக்கு -இரண்டு, பெர்ய காமாட்சி விளக்கு.
மணி – கோயில் மணி, கை மணி.
தூப கொளுசு,( சாம்பிராணி ) தட்டு
பொங்கல் செய்யும் பாத்திரம் செப்பில்.
விக்ரகங்கள் கழுவுவதற்கு செப்பு குடம்.
வியாழன், 4 செப்டம்பர், 2025
அவனவன் செய்த வினையை அவனவன்தான் அனுபவிக்க வேண்டும்
புதன், 3 செப்டம்பர், 2025
மனோபூஜை பத்தியம் இல்லாதது, எந்தநேரமும் கும்பிடலாம்
செவ்வாய், 2 செப்டம்பர், 2025
எந்த தெய்வத்தையும் கும்பிடலாம், எல்லாம் ஒன்றே , சக்தியும் ஒன்றே, சிவனும் ஒன்றே.
நம்பிக்கை தான் ஆதாரம். கஷ்டம் வரும், சுவாமிகள் மேல் பாரத்தை போட்டு, அவரை வேண்டிக்கொண்டால், கஷ்டத்திலும் கஷ்டம் குறைந்து கொண்டே வரும், எவ்வளவு குறைந்தது என்று நமக்கு தெரியாது.